அம்பேத்கரின்
இன்றைய தேவை
ஜி.
இராமகிருஷ்ணன்
'முக்கியமான
தொழிற்சாலைகளும், பணிகளும்
அரசுடைமையானவையாக இருக்க வேண்டும். காப்பீட்டுத் தொழில் பொதுத்துறையில் இருக்க
வேண்டும். தனியார் துறையும், தொழிற்சாலைகளும் பொருளாதாரத்தில் ஒரு பங்கு வகிக்கலாம். ஆனால் ஆதிக்கம்
செலுத்தக்கூடாது. நிலம் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும். விவசாயத்தில் கூட்டுறவுப்
பண்ணைத் திட்டத்தை அறிமுகம் செய்து சிறு விவசாயிகளையும் அதில் இணைத்துக் கொள்ள
வேண்டும்' என்றெல்லாம்
வலியுறுத்திய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவுச் சொற்பொழிவை சென்னைப் பல்கலைக்
கழகத்தில் ஜி. இராமகிருஷ்ணன் நிகழ்த்தியிருக்கிறார். இன்றைய நிலையில், தமிழ்நாட்டில் நிலவுகிற தீண்டாமைக் கொடுமைகளின்
பட்டியலை அதன் அனைத்து வடிவங்களிலும் தலையிட்டு அவற்றை அம்பலப்படுத்துகிற உரை இது.
இந்துவாகப் பிறந்திருந்த போதிலும், சாதீய மனுதர்மப் பாகுபாடுகளின் உறைவிடமாகியிருக்கும் அந்த இந்துமதத்தைத்
துறந்து பௌத்தம் தழுவியவர் டாக்டர் அம்பேத்கர். சிறிய கையடக்க வடிவில் செறிவான சிந்தனைத் தொகுப்பு.
No comments:
Post a Comment